ஒழுங்கு நடவடிக்கை ரத்து!! மகிழ்ச்சியில் வழக்கறிஞர்!!

கோவை மாவட்டம் வால்பாறை முன்னாள் நகரச் செயலாளர் வழக்கறிஞர் தா. பால்பாண்டி அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை நீக்கியது.

இது தொடர்பாக திராவிட முன்னேற்ற தலைமை கழகத்திற்கும், கழகத் தலைவருக்கும் தான் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் கடிதம் அனுப்பினார்.

அதனை திராவிட முன்னேற்ற கழகமும் தலைமையும், கழகத்தின் தலைவரும் மறு பரிசீலனை செய்து மீண்டும் கட்சிப் பணியாற்ற வரும்படி உத்தரவு பிறப்பித்தனர். உத்தரவை பெற்றுக் கொண்ட கழகத்தில் பணியாற்றிய மீண்டும் மகிழ்ச்சியுடன் இணைந்தார் வழக்கறிஞர்
இந்நிலையில் வால்பாறை பகுதியில் இருக்கும் தி.மு.க நிர்வாகிகள் வழக்கறிஞர்
தா. பால்பாண்டி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இனிப்புகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர் அதே சமயம்
தி.மு.க தலைமைக்கும் கழகத்தின் தலைவர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

-P.பரமசிவம், வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp