குண்டும் குழியுமான சாலைகள் பயன்படுத்த முடியாமல் வால்பாறை மக்கள் அவதி கண்டும் காணாமல் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள எஸ்டேட் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக சோலையார் எஸ்டேட் சித்தி விநாயகர் கோவில் அருகே உள்ள எஸ்டேட் குடியிருப்பில் பகுதியில் உள்ள சாலைகளும், பன்னி மேடு எஸ்டேட் ஆபராம் மேஸ்திரி பகுதியில் உள்ள குடியிருப்பு செல்லும் சாலைகளும், மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில் சாலைகள் பல வருடங்களாக குண்டும் குழியுமாகும் அப்பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மருத்துவ உதவி பெற முடியாமல் வயதான முதியோர்கள் கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் ஒரு சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது இதை கருத்தில் கொண்டு அப்பகுதியில் இருக்கும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இப்பகுதியில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று எங்களை ஏமாற்றுகிறார்கள் என இப்பகுதி பொதுமக்கள் குமருகிறார்கள்.

 

நாளைய வரலாறு பத்திரிக்கையின் சார்பாக நாமும் இவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நேரில் ஆய்வு செய்யும் போது மிகவும் வேதனையாக உள்ளது. சாமானிய மக்கள் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இன்றும் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதியில் உள்ள சில எஸ்டேடுகளில் காண முடிகிறது. சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவர்களுக்கு அரசு தனியார் எஸ்டேட் நிர்வாகம் நிலங்களை குத்தகை அடிப்படையில் கொடுக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேயிலை மற்றும் இதர பயிர்களை பயிரிடுவது செய்வதற்கு வழிவகை செய்து தர வேண்டும் மேலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு வசதி,சாலை வசதி, மருத்துவ வசதி செய்து தர வேண்டும் ஆனால் இவையெல்லாம் எஸ்டேட் நிர்வாகம் செய்து கொடுப்பதில்லை . அரசும் கண்டு கொள்வதில்லை. அரசு தனியார் நிறுவனத்திற்கு இடங்களை ஒப்படைக்கும் போது பல நிபதனைகள் வைக்கப்படுகிறது.

அதுபடி 9 நிபந்தனை சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைக்கு நிலங்களை கையகப்படுத்தி அரசு மூலமே செய்து கொடுக்கலாம். ஆனால் ஆட்சியாளர்கள் நகர மன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

இனியாவது செய்து கொடுப்பார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்தியாளர் வால்பாறை,
-P.பரமசிவம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp