தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் ரோட்டரி கிளப் ஆப் கோவில்பட்டி,
கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் உலகபுத்தக தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தக விற்பனை துவங்கியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல்10ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக விற்பனையில் தமிழ் இலக்கியம், போட்டி தேர்வு நூல்கள், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு,அறிவியல், உள்ளிட்ட 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் உள்ளன.இதில் அனைத்து புத்தகங்களுக்கும் 10%தள்ளுபடி உண்டு.
துவக்க நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிவர்மா,பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார்.
புத்தக விற்பனை அரங்குகளை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துச்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து புத்தக விற்பனை அரங்குகளை பார்வையிட்டார் முதல் விற்பனையை ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு துவக்கி வைக்க ரவிமாணிக்கம் பெற்றுக்கொண்டார்.
இதில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வீராசாமி,ஜேசிஐ நிர்வாகிகள் ரகுபதி, தினேஷ் பாபு,வர்ஷன், தீபன்ராஜ், சூர்யா, ஸ்டீபன்நரேஷ். உள்பட பலர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.