கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரத்தில் காணப்படும் வேர்வாடல் நோயின் பாதிப்பு குறித்து ஆய்வு மற்றும் புள்ளி விவரம் சேகரிக்கும் பணி இன்று முதல் ( 01.03.24 வெள்ளிக்கிழமை ) முதல் நடைபெறுகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் நேரடியாக தங்களது தோப்புகளுக்கு கிராமம் வாரியாக வர இருக்கிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட தென்னை விவசாயப் விவசாயிகள் தங்களது தென்னந்தோப்பில் எத்தனை மரங்கள் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. சேதாரத்தின் மதிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்கள் தெளிவாக தெரிவிக்கவும்.
மேலும் தங்கள் புகைப்படம், பண்ணை வரைபடம், ஆதார் அட்டை ஒரிஜினல் மற்றும் ஒரு நகலுடன் தயாராக இருக்குமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-M.சுரேஷ்குமார்.