குமரகுரு நிறுவனங்கள் அருட்செல்வர் டாக்டர்.என்.மகாலிங்கம் விருதை பேராசிரியர் டாக்டர் விஸ்வநாத் காரட்டுக்கு வழங்கப்பட்டது….

குமரகுரு நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான அருட்செல்வர் டாக்டர்.என்.மகாலிங்கம் விருது, புனேவில் உள்ள எம்ஐடி குழும நிறுவனங்களின் நிறுவனர்-தலைவர் பேராசிரியர் டாக்டர் விஸ்வநாத் காரட்டுக்கு மதிப்பு அடிப்படையிலான கல்வி, சமயங்கள், உலகளாவிய சகோதரத்துவம், மனித நலன் மற்றும் அவரது இணையற்ற பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது. குமரகுரு நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், இவ்விழாவின் பிரதம விருந்தினர் இந்திய உச்சநீதிமன்றம் நீதிபதி சுந்திரேஷ், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியம் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர் முன்னிலையில் நிறுவனர் மற்றும் தலைவர் எம்ஐடி குழும நிறுவனங்கள், பேராசிரியர் டாக்டர் விஸ்வநாத் டி கரட் அவர்களுக்கு மதிப்புமிக்க விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், டாக்டர் என்.மகாலிங்கம் மற்றும் பேராசிரியர் டாக்டர் காரட் ஆகியோரின் சிறந்த வாழ்க்கையைப் போற்றுவதற்கு மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையைப் பாடமாக எடுத்துக்கொண்டு வாழவும் இந்த மாபெரும் சந்தர்ப்பம் அமையும் என்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

டாக்டர்.என்.மகாலிங்கம் மற்றும் டாக்டர் காரட் ஆகியோர் தங்கள் சொந்த வெற்றிகளுக்கு அப்பால் சிந்திக்கும் திறனை வெளிப்படுத்தி, மாற்றத்திற்கு வழி வகுத்த சிறந்த மனம் படைத்தவர்கள் என்றும், அவர்களைப் போன்ற ஆளுமைகள் இப்பகுதி இளைஞர்களிடமிருந்து இன்னும் உருவாக வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார். விருதை ஏற்றுக்கொண்ட டாக்டர் விஸ்வநாத் காரட், “அவர் (டாக்டர். என். மகாலிங்கம்) ஒரு தெய்வீக ஆன்மாவாக இருந்தார், அவர் பணிந்து ஆசி பெறுவதற்காகவே நான் இங்கு வந்தேன், என்றார். மேலும் அவர் பேசுகையில் , மற்ற நாடுகளுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதையை காட்டும் உலகளாவிய தலைவராக இந்தியா உருவெடுக்கும் என சுவாமி விவேகானந்தர் உறுதியாக நம்புவதாகவும், அதுபோன்ற தருணம் தற்போது வந்துள்ளது என்றும், அது நமது கடமை என்றும் வலியுறுத்தினார். நாம் அனைவரும் இந்தியாவை விஸ்வகுருவாக மாற்றுவோம், இதன் மூலம் அடிப்படையில் ஒரே குடும்பமாக இருக்கும் இந்த உலகம் முழுவதும் பயன்பெறும், என்றார்.

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp