கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடற்கரை கிராமங்கள் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் உருவானதால் மீனவர்கள் மட்டும் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடற்கரையோர கிராமங்களான கோவளம், வாவுதுறை, பிள்ளை தோப்பு, அழிக்கால், மேலதுறை உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் வரலாறு காணாத அளவிற்கு கடல் சீற்றம் ஏற்பட்டு 20 அடிக்கு மேல் கடல் அலைகள் உருவானதால் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி கடல் நீர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது இதனால் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் அச்சம் அடைந்தனர் மேலும்
கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரையான பகுதிகளில் உள்ள கடைகளை கடல் அலை சூழ்ந்திருப்பதால் பதட்டமான சூழ்நிலை உருவாக்கி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-P.இந்திரன்.கன்னியாகுமாரி.