கோவை: தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிகமாக காணப்படுகிறது.பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு குளிர்ச்சியான நிலைமையை இறைவன் ஏற்படுத்தி தர வேண்டும் என கோவை கரும்புகடை பகுதியில் மழை வெண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள்,ஆண்கள்,குழந்தைகள் பங்கேற்று
சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும் மரக்கன்றுகளை அனைவரும் நடவு செய்ய வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
-சீனி, போத்தனூர்.