விளாத்திகுளம் டி.எஸ்.பிக்கும் – அதிமுகவினருக்கிடையே கடும் வாக்குவாதம் : ஒருமையில் பேசியதால் கொந்தளித்த கட்சி நிர்வாகிகள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை ரோட்டில் அதிமுக நிர்வாகியான பெருமாள் சாமி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தள்ளு வண்டியில் பானிபூரி கடை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

இந்த பானி பூரி கடையை இங்கு நடத்தக்கூடாது என்று எவ்வித காரணங்களும் கூறாமல் விளாத்திகுளம் டி.எஸ்.பி இராமகிருஷ்ணன் கூறியதாக காவலர்கள் பெருமாள் சாமி-யிடம் கடையை காலி செய்ய சொல்லியதாக கூறப்படுகிறது.

இதனால் இன்று விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் பெருமாள் சாமி உட்பட ஏராளமான கட்சியினர் விளாத்திகுளம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று டி.எஸ்.பி இராமகிருஷ்ணனிடம் கடையை காலி செய்ய கூறியதற்கான காரணம் என்னவென்று கேட்டனர்.

அதற்கு டி.எஸ்.பி. இராமகிருஷ்ணன் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி கடையை மாற்று இடத்திற்கு கொண்டு செல்லும்படிதான் அறிவுறுத்தி உள்ளோம்.. என கூறினார். அப்போது பேச்சுவார்த்தையின் போது, விளாத்திகுளம் டிஎஸ்பி இராமகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகளை மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசியதால் கட்சி நிர்வாகிகளுக்கும் – காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் டி.எஸ்.பி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும், டி.எஸ்.பி அலுவலகத்தின் முன்பும் காவல்துறை அதிகாரிகளிடம் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

விளாத்திகுளம் பகுதி நிருபர்,
-பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts