கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறையை சுற்றியுள்ள நீர் நிலைகள் மற்றும் நீர் தேக்கங்களில் தண்ணீர் நிரம்பி வழிகிறது மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே ஆழமான நீர்நிலைகள் மற்றும் ஆற்றோர பகுதிகளில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் மேலும் வால்பாறை பகுதியில் உள்ள காமராஜர் நகர், இந்திரா நகர், அண்ணா நகர், வாழைத்தோட்டம், எம்ஜிஆர் நகர், சிறுவர் பூங்கா, கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும் மழைக்காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளான மண் சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுதல் மற்றும் பாறைகள் உருண்டு வருதல் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வால்பாறை நகராட்சி அதிகாரிகளும் ஆய்வாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மேலும் ஏதாவது இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்ய குமார்.