கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை மற்றும் கூட்டமாக காட்டு யானைகள் முகாமிட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது.
வீடுகளில் வைத்து இருக்கும் அரிசி, பருப்பு போன்ற சமையல் பொருட்கள், விவசாய நிலங்களில் ஆடு, மாடுகளுக்கு வைத்து உள்ள தீவனங்கள், விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி வருவது தொடர்கதை ஆகியுள்ளது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க தமிழக அரசு மற்றும் வனத் துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், சில தினங்களுக்கு முன்பு வனக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம், முறையிட்ட போது அது குறித்து மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தை பாதுகாத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழி வகை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் காவடி அம்மன் கோவில் அருகே உள்ள ஆற்று வழியாக, ஒற்றைக் காட்டு யானை நடந்து சென்றுள்ளது இதனை அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து உள்ளார். நரசிபுரம் பகுதியில் நேற்று குட்டிகளுடன் 7க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் ஒன்று விவசாய தோட்டத்துக்குள் முகாமிட்டது. முகாமிட்டு இருந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப் பகுதிக்குள், வனத் துறையினர் விரட்டினர். கோவையில் தொண்டாமுத்தூர், தடாகம், வடவள்ளி, பேரூர், மதுக்கரை, மருதமலை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அவ்வப்போது காணப்படுகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.