தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் – சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் நடைபெற்றது.
மேலும் பருவமழை மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பது குறித்தும் மழைநீர் தேங்கி டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்களை பரவாமல் கட்டுப்படுத்துதல் ஆடு மாடு கோழி உள்ளிட்ட விலங்கினங்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும், குளங்கள் உள்ளிட்ட இடங்களில் உடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கப்படுவது குறித்தும், விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி போதுமான உரங்களை வினியோகிக்கப்படுவது குறித்தும் பள்ளி உள்ளிட்ட இடங்களில் மின் கசிவு ஏற்படாமல் பாதுகாப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவகாமி, ஓட்டப்பிடாரம் மின்வாரிய பொறியாளர் சுடலைமுத்து மற்றும் ஸ்ரீவைகுண்டம் கருங்குளம் தூத்துக்குடி ஒன்றிய அனைத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.