கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் அழிந்த நெல் பயிருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும் என ஆற்றங்கரை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம், ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “ஆற்றங்கரை கிராமத்தில் பெரிய கண்மாய், சிறிய கண்மாய் தண்ணீர் மூலம் நெல் பயிர் சகுபாடி விவசாயம் செய்து வருகிறோம். கடந்த 2023ம் வருடம் புயல், மழை, வெள்ளத்தில் நெல் பயிர் முற்றிலும் அழிந்து விட்டது. மேற்படி நெல் பயிருக்கு இன்சூரன்ஸ் தொகை செலுத்தியும் பணம் வரவில்லை மேற்படி நெல் பயிருக்கு உடனடியாக இன்சூரன்ஸ் தொகையை வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
ஆற்றங்கரை பகுதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளான திங்கள்கிழமை மனு கொடுக்கப்பட்டு
கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.