கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மூதாட்டி ஒருவர் கோவிலுக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். திரும்பும் வழியில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியை பின் தொடர்ந்து உள்ளார். திடீரென்று கழுத்தில் போட்டிருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை இழுத்து புடுங்கி சென்றுள்ளார். உடனடியாக இடுக்கி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போதான் அணைக்கரை ராஜகண்டம் என்ற பகுதியை சார்ந்த சுதீஷ் என்ற இளைஞர் திருடியது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இரண்டு மாதத்திற்கு முன்பாக அணைக்கரை பகுதியில் வீட்டில் தங்கம் திருடப்பட்டது குறித்தும் இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.