கோவை மாவட்டம் உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, செல்வபுரம், பேரூர், ஆகிய பகுதிகளுக்கு செல்ல மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்ததால் விரைந்து செல்லும் வகையில் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையிலும் நெடுஞ்சாலை துறையினர் சார்பாக 470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பாலத்தில் மொத்தம் 7 ஏறு மற்றும் இறங்கு தளங்கள் அமைந்துள்ளது. இறங்கு தள பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. ஏறுதளம் 150 மீட்டர் நீளமும் 8.45 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு சாலை ஏறு தளம் 162 மீட்டர் நீளமும் 8.20 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு இறங்கு தளம் 144 மீட்டர் நீளமும் 7.58 மீட்டர் உயரத்திலும் மற்றும் பொள்ளாச்சி சாலை இறங்குதளம் 140 மீட்டர் நேரமும் 8.40 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிதாக மேம்பாலம் திறக்கப்பட்ட நிலையில் 5 நிமிடத்தில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேம்பாலத்தை கடக்க முடியும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோவை பொள்ளாச்சி பாலக்காடு செல்லும் வாகனங்கள் இனி வாகன நெரிசலில் சிக்காமல் செல்லலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கோவை வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார். அந்த புதிய பாலத்தில் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே விரிசல் ஏற்பட்ட பாலத்தில் ஒரு சில துகள்கள் உடைந்து கீழே விழுந்து வருகின்றது. அதனால் வாகன ஓட்டிகள் அந்த பாலத்தை கடந்து செல்வதற்கு அச்சமடைகின்றனர்.
புதிதாக திறக்கப்பட்ட பாலம் என்பதினால் பொதுமக்கள் பாலத்தில் பயணிக்க தயங்கி வருவதாகவும் விளம்பரத்திற்காக தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டு அவசரகதியில் பாலம் திறக்கப்பட் டதாகவும் இதில் அதிக அளவு குளறுபடிகள் ஏற்பட்டு இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மேலும் ஆத்துப்பால முதல் உக்கடம் சந்திப்பு வரை புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் பெரிய சேதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னதாகவே அதனை கவனத்தில் கொண்டு பாலத்தை பராமரித்து பொதுமக்களின் உயிர்களை காக்க வேண்டும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.