கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள கூலங்கள் அருகாமையில் சிறுகுன்றா செல்லும் சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கேரளா மாநிலம் பாலக்காடு பட்டாம்பி சார்ந்தவர் சைமுதீன் வயது 42. அவர் வால்பாறை சுற்றி பார்க்க குடும்பத்துடன் வந்தவர் கூலங்கள் ஆற்று சிங்கோனா செல்லும் சாலையில் கட்டுப்பாட்டு இழந்த கார் நிலை தடுமாறி செடி புதர்களுக்குள்ளே பாய்ந்தது. காரில் வந்த ஆறு பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு நல்க வேண்டும், கூழாங்கல் ஆற்று பகுதியில் விழா காலத்தினால் விடுமுறை நாட்களில் காவல் அதிகாரிகள் பாதுகாப்பும் பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.