சிவகங்கை மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் ஆதிதிராவிடர் மேம்பாடு, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள், மாணவர் உதவித்தொகை, மற்றும் பல்வேறு ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டப்பணிகளுக்காக அரசினால் ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த பத்தாண்டுகளாக அந்தத் துறையில் உதவியாளராக பணிபுரிந்த சீதாபிரியா என்பவர் சுமார் நான்கரை கோடி ரூபாய் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, தனது கணவருடன் கைது செய்யப்பட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன்பிறகு இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு, காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்த விசாரணையில், அதே துறையில் சீதாப்பிரியாவின் மேலதிகாரிகளாகப் பணிபுரிந்த 8 வட்டாட்சியர்களும் இந்த கையாடலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீதும் சட்ட நவடவடிக்கை எடுக்க அனுமதி வேண்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் பரிந்துரைக்கப்பட்டது.
அரசுப்பணியாளர்கள் மீது குற்ற வழக்கு தொடர,துறை தலைமையின் அனுமதிபெற வேண்டியது விதிகளின்படி கட்டாயம் என்பதால்,சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அந்த 8 தாசில்தார்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்கப்பட்டும் அந்த தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஊழல் புரியும் அரசு அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் நிலையில்,அதற்கு மூன்று மாத காலத்திற்குள் அனுமதி அளிக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர், பத்து மாதங்களாகியும் அனுமதி அளிக்காததால், சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த போது அவரிடம் இந்த விடயம் ஆதிதிராவிட நலவாரிய உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்கு அவர், ‘இந்த மோசடி புகார் குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என அவர் கேள்வி எழுப்பிய பிறகு, குற்றம் சாட்டப்பட்ட எட்டு வட்டாட்சியர்களில் 3 வட்டாட்சியர்கள் மீது மட்டும் குற்ற நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த 8 வட்டாட்சியர்கள் மீதும் 17பி எனப்படும் பெருந்தண்டனைக்குரிய ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு துறை ரீதியான குற்றச்சாட்டு பதிவு செய்த பின்னரும்
அந்த 8 வட்டாட்சியர்களையும், மாவட்ட ஆட்சியர் இதுவரை பணியிட நீக்கம் கூட செய்யாத நிலையில் அவர்கள் மேலும் பதவி உயர்வு பெற்று, தற்போது துணை ஆட்சியாளராக பணி செய்வது வியப்பாக இருக்கிறது.
இந்த வழக்கினை விசாரித்த மாவட்ட குற்றபுலாய்வுத் துறையின் அதிகாரி பிரகாஷ், உயர்நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் “இந்த 8 வட்டாட்சியர்களும் ஊழல் குற்றவாளிகள் எனத் தெரிந்தும், மாவட்ட ஆட்சியர் அவர்களை பணியிடை நீக்கம்கூட செய்யவில்லை” என தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசு விதிகளின்படி மூன்று வருடங்களுக்கு மேல் ஒரு அலுவலர் தொடர்ந்து ஒரே அலுவலகத்தில் பணிபுரியக் கூடாது என விதி இருந்தும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் சீதாபிரியா, ஒரே அலுவலகத்தில் பத்து வருடங்கள் பணி புரிந்து வந்திருப்பதே ஊழல் தொடர்நது நடைபெற முக்கிய காரணமாக இருந்துள்ளது. மேற்கண்ட ஊழலுக்குப் பின்பு தற்போது வரை சிவகங்கை மாவட்டத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் ஊழல் செய்யும் அரசு அலுவலர்களை கடந்த நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகளின்படி கூட மாற்றாமல் தொடர்ந்து பணி புரிய அனுமதிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது ஊழலை ஆதரிக்கும் நடவடிக்கையாக உள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான வட்டாட்சியர்களை காப்பாற்ற வேண்டிய காரணம் என்னவென்றும், ஊழலுக்கு துணைபோகும் இந்த மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழும் நிலையில் தற்போது சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு நாள் ஆய்விற்காக வருகை தரும் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தின்போது இதுகுறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஆதிதிராவிட நலத்துறையில் அமர்த்தப்படும் வட்டாட்சியர்கள் ஆதிதிராவிட வகுப்பினராக இருந்தால் மட்டுமே மாணவர்களின் சிரமங்களை அறிந்து செயல்படுவார்கள் எனவும் இதர வகுப்பினரை இந்த துறையில் வட்டாட்சியர்களாக பணிபுரிய அனுமதிக்கக் கூடாது எனவும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– பாரூக்,
சிவகங்கை மாவட்ட தலைமை நிருபர்.