இடுக்கி மாவட்டத்தில் நான்கு லட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகள்!!

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் அதிகமான காடுகளைக் கொண்ட பகுதிகளாகவும் மலை பிரதேசமாகவும் இதுவரைக்கும் ரயில் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து சேவை இல்லாத மாவட்டமாகவும் மிக முக்கியமான சுற்றுலா தலங்களைக் கொண்ட மாவட்டமாக திகழ்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எல்லா ஆண்டுகளிலும் குளிர்காலம் ஆரம்பித்து விட்டாலே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் இந்த வருடத்தில் ஒரு மாதத்தில் மட்டும் அதாவது டிசம்பர் மாதத்தில் மட்டுமே இடுக்கி மாவட்டத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளா சுற்றுலா துறை மேம்பாடு சார்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதிகமாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் பல பகுதிகள் வாகமண், ராமக்கல் மேடு, கொழுக்குமலை,மூணார், குண்டலை டேம், மேட்டுப்பட்டி டேம், டாப் டிவிஷன் போன்ற பல பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அப்பகுதியில் வசிக்கும் வாணிபம் செய்யும் தொழில் கூடங்கள் வியாபார கடைகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் வைத்திருப்பவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்கள் மிக முக்கியமான சுற்றுலா தளமாக இடுக்கி மாவட்டம் இருந்தாலும் வாகன போக்குவரத்து நெரிசல்களும் வாகனத்தை பார்க்கிங் செய்யும் வசதி இல்லாத காரணங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனை சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிறுவனம் உடனடியாக செயல்பட்டு இதற்கான தீர்வு எடுத்தால் இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இடுக்கி மாவட்டம் அமையும் இதன் மூலமாக கேரளா மாநிலத்திற்கு அதிகமான வருமானம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் நடக்கும் வாய்ப்பாக அமையும் என்ன சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp