கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகாவில் உள்ள வாட்டர் பகுதியில் பிஎஸ்என்எல் தொலை பேசி நிலையம், காவல் நிலையம், மருத்துவமனை, தபால் நிலையம், ஏடிஎம் மையம் ஆகிய வசதிகள் இருந்தும் அப்பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் கரடிகள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் அதனால் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி கவுன்சிலரிடம் புகார்கள் தெரிவித்தும் கவுன்சிலர் வந்து பார்க்கவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.
அப்பகுதியில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்குமென கழிப்பிடம் கட்டி இதுவரை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் பூட்டி உள்ளது.
மக்களின் அடிப்படை தேவைகளுக்காக உடனே அப்பகுதி கவுன்சிலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையதளங்களில் பரவி வருகிறது. அப்பகுதியில் மின் விளக்குகளை சரி செய்து தர வேண்டும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.