கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில்
அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வால்பாறை P.பரமசிவம் கோரிக்கை மனு ஒன்று அனுப்பியுள்ளார்.
மனுவில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புதிய சாலைகள் போடக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அடித்தட்டு மக்கள் அடிப்படை வசதிகள் பெற முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக மருத்துவ வசதி,போக்குவரத்து வசதி, குழந்தைகள் படிப்பது மட்டுமல்லாமல் பலவேறு பிரச்சனைகளால் நாள்தோறும் சிரமப்படுகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க திராவிட மாடல் அரசின் கதாநாயகன் அடித்தட்டு மக்களின் பாதுகாவலராக வெளிப்படுத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் இப்பிரச்சனையை உடனடியாக சரி செய்து இப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாக்க வேண்டும்
என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.