
மங்கலம்,ஆக.13-
மங்கலம் போலீசார் மங்கலத்தை அடுத்த இடுவாய்-எம்.ஜி.ஆர்-நகர் பகுதியில் தீவிர ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த நபரிடம் சோதனை செய்ததில் 1கிலோ 800 கிராம் குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில் இடுவாய் அருகே உள்ள வாசுகிநகர் பகுதியைச் சேர்ந்த பாபு ராஜ்(30) என்பதும், விற்பனைக்காக குட்கா பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
பாபுராஜை கைது செய்த மங்கலம் போலீசார் அவரிடம் இருந்த 1கிலோ 800 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாஷா.











