விளாத்திகுளம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகளை பொதுமக்களுடன் சிறை பிடித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள M.சண்முகபுரம் கிராமத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு மற்றும் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இருந்தும் அரசு பேருந்துகள் எங்கள் கிராம பேருந்து நிலையத்தில் நின்று செல்வதில்லை என்று குற்றம் சாட்டினர். நேற்று தூத்துக்குடி பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் ஏறிய ஒரு பெண்மணியை நடத்துனர் ஒருவர் இந்த பேருந்தில் ஏறலாமா என்று திட்டியதாக அந்த பெண்மணி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் குற்றம் சாட்டினார்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை அடுத்து கிராம மக்களுடன் சேர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ECR சாலையில் வந்த அரசு பேருந்துகளை சிறைபிடித்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கீழே இறங்கி வருமாறு கூறினார், அதில் ஒரு பேருந்து ஓட்டுனர் கீழே இறங்காமல் இருந்ததால் ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர், அந்த ஓட்டுநரை உடனே வருமாறு கூறி, ஓட்டுநரை பார்த்து நீ சர்க்காருக்கு தானே வேலை பார்க்கிறாய்,கூப்பிட்டா கீழே இறங்கி உனக்கு வர முடியாதா உன்னை சஸ்பெண்ட் பண்ணி விடுவேன் என்று எச்சரித்தார், அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ஆணையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் படித்துக் காண்பித்தார், அதில் திருநெல்வேலி மண்டலம் கும்பகோணம் மண்டலம் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் எம் சண்முகபுரம் பேருந்து நிறுத்தத்தில் இன்று செல்ல வேண்டும் என்று இருந்ததை சுட்டிக்காட்டினார். இரண்டு வேகத்தடைகள் உள்ளன அந்த வேகத்தடைக்கு இன்று மெதுவாக செல்லும் நேரத்தில் இருந்து நீங்கள் நிறுத்தி செல்லலாமே என்று சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் ஓட்டுநர்களிடம் கூறினார்.

இதனை அடுத்து பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்களிடம் அரசுப் பேருந்துகள் அனைத்தும் இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து பேருந்துகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றது, இதனால் சிறிது நேரம் ECR சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்த கிராம மக்களிடம் கேட்ட பொழுது,மாவட்ட ஆட்சியர் உத்தரவு காண்பித்தும் அரசு பேருந்துகள் எங்கள் கிராமத்தில் நின்று செல்லவில்லை என்றும், இரவில் சூரங்குடி மற்றும் மேல்மாந்தையில் இறக்கி விடுவதால் நாங்கள் 150 ரூபாய் ஆட்டோவுக்கு கட்டணம் கொடுத்து எங்கள் கிராமத்திற்கு வருவதாகவும்,பள்ளி கல்லூரி மாணவிகள் இரவு நேரங்களில் சூரங்குடியில் இறங்கி நடந்து வரும் சூழ்நிலை உள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை,

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts