உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு விழிப்புணர்வு!!

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு விழிப்புணர்வு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு பூமியை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமத்துல்லா உலக ஓசோன் தினம் குறித்து பேசும்பொழுது
ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் உலக ஓசோன் தினம் , ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. 1994 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட இந்த நாள், 1987 ஆம் ஆண்டு மாண்ட்ரீல் நெறிமுறை கையெழுத்தான தேதியைக் குறிக்கிறது, இது ஓசோன் படலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்த நாடுகள் ஒன்றிணைந்தபோது ஒரு முக்கிய நிகழ்வாகும். ஓசோன் படலம் பூமியின் அடுக்கு மண்டலத்தில் அமைந்துள்ளது மற்றும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் பெரும்பாலானவற்றை உறிஞ்சி, அதன் பாதுகாப்பை அனைத்து வகையான உயிர்களுக்கும் அவசியமாக்குகிறது.

2025 ஆம் ஆண்டு உலக ஓசோன் தினத்தின் கருப்பொருள் ஒவ்வொரு ஆண்டும், உலக ஓசோன் தினம் தற்போதைய சவால்கள் மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும் ஒரு தனித்துவமான கருப்பொருளைச் சுற்றி கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ கருப்பொருள் “வாழ்க்கைக்கான ஓசோன்” . இந்த கருப்பொருள் நமது கிரகத்திற்கு ஈடுசெய்ய முடியாத கேடயமாக ஓசோன் படலத்தின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் மாண்ட்ரீல் நெறிமுறையின் உலகளாவிய வெற்றி மற்றும் எதிர்கால ஆற்றலைக் கொண்டாடுகிறது என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், செல்விஜாய் வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் தங்களுடைய பிறந்த தினத்தில் ஒவ்வொருவரும் மரக்கன்று நட்டு ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts