
கோவை: கல்வி , ஆராய்ச்சி மற்றும் சமூகப் பங்களிப்பில் 75 ஆண்டுகால சிறப்பான பயணத்தை கொண்டாடும் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பிளாட்டினம் ஜூபிலி ( 2025– 2026 ) விழாவையொட்டி , அக்கல்லூரியின் சிவில் பொறியியல் துறை , ” Recent Advances in Construction Materials and Structures ( RCMS 2026 ) ” என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டை ஜூன் 19 மற்றும் 20 , 2026 ஆகிய தேதிகளில் நடத்துகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கட்டுமானப் பொருட்கள் , கட்டமைப்பு பொறியியல் மற்றும் நிலைத்தன்மை கொண்ட உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான சமீபத்திய ஆராய்ச்சி முன்னேற்றங்கள் , புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விவாதிக்க கல்வியாளர்கள் , ஆராய்ச்சியாளர்கள் , தொழில்துறை வல்லுநர்கள் , ஆலோசகர்கள் மற்றும் மாணவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
அறிவுப் பரிமாற்றம் , கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை – கல்வித்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாக அமைகிறது.
மாநாட்டின் துவக்க விழா ஜூன் 19 , 2026 அன்று நடைபெறுகிறது . மாருதி இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் , அகமதாபாத் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு . நிமேஷ் டி . படேல் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டைத் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முகமது ஏ . எல் கவாடி மற்றும் இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹசன் அல் நகீம் ஆகியோர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.










