கர்ப்பிணி பெண் காவலர் திடீர் தர்ணா போராட்டம்!!

தூத்துக்குடியில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் ஆவேசமடைந்த கர்ப்பிணி பெண் காவலர் ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனம் முன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் இந்திரா காந்தி. இவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். ஒரு புகார் தொடர்பாக இவர் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். கர்ப்பிணியாக இருக்கும் இவர், தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த இந்திரா காந்தி, தூத்துக்குடியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த எஸ்பி வாகனத்தின் முன்பாக திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட காவலர் கூறுகையில்:”பணியிடை நீக்க காலத்தில் வழங்கப்பட வேண்டிய வாழ்வாதார உதவித்தொகையும் (Subsistence Allowance) எனக்கு முறையாகக் கிடைக்கவில்லை. இதனால் பொருளாதாரப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளேன். தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கும் எனக்கு, உடனடியாக மீண்டும் பணி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

கர்ப்பிணி காவலர் திடீரெனத் தர்ணாவில் ஈடுபட்டதைக் கண்ட சக போலீசார், உடனடியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். எஸ்பி அலுவலக வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பான நிலவியது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts