
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள விருசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் தனது மகன் ரமேஷின் 15-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, மகன் மீது கொண்ட பாசத்தினாலும் மாட்டு வண்டிப் பந்தயத்தின் மீதுள்ள ஈர்ப்பினாலும் இந்த இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.


இந்தப் போட்டிகள் பூஞ்சிட்டு மற்றும் தேன்சிட்டு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன. பூஞ்சிட்டு பந்தயத்திற்குப் போய்வர 5 மைல் தூரமும், தேன்சிட்டு பந்தயத்திற்குப் போய்வர 4 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 56 ஜோடி மாடுகள் கலந்துகொண்டு இலக்கை நோக்கிச் சீறிப்பாய்ந்தன.
மாட்டு வண்டி பந்தயத்தினை திமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், வண்டிகளைத் திறம்பட ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டி சார்பாகப் ரொக்கப் பரிசுத் தொகையும் கோப்பைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.









