
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SDTU தொழிற்சங்கம் மற்றும் கோவை மத்திய மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், கார் டாக்ஸிகளை முறைப்படுத்தி அரசு அனுமதி பெறாமல் உள்ள டாக்ஸி செயலிகள் டாக்ஸி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நலவாரியங்களில் பண பயன்களை அதிகப்படுத்த வேண்டும் அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்கள் முறையை கைவிட வேண்டும், ஆட்டோ களுக்கான மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி SDTU தொழிற்சங்கம் மற்றும் கோவை மத்திய மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். SDTU மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகள் குறித்தும் அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கபட்டது.இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் SDTU மாவட்ட செயலாளர் NM கமருதீன் வரவேற்புரையாற்றினார்.
SDTU மண்டல தலைவர் ஹபீப் ரஹ்மான்
SDPI மாவட்ட தலைவர் இஷாக்
SDTU மாவட்ட துணை தலைவர் ரபீக் துணை செயலாளர் அப்துல் ரஹீம்
பொருளாளர் மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இதில்
SDTU மாநில தலைவர் JM அசன் பாபு
SDPI மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது மாவட்ட துணை செயலாளர் சபீர் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.






