
தூத்துக்குடி மாவட்டம்- விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் – மிளகுநத்தம் செல்லும் சாலையில் கல்லாற்றின் குறுக்கே கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.23-கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணியினை *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டு வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக பணியை துரிதப்படுத்துவதற்கு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் இளநிலை பொறியாளர் நெடுஞ்சாலை சார்லஸ் பிரேம்குமார் ஓட்டப்பிடாரம் வருவாய் ஆய்வாளர் பொன் முருகேசன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஒப்பந்ததாரர் சுப்பா ரெட்டியார் சமூக ஆர்வலர் பேரிலோவன்பட்டி செல்வகுமார் வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்து ராஜ் ஒன்றிய பொருளாளர் அரிபாலகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜன்,வெள்ளைச்சாமி வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆனந்த் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா கிளைச் செயலாளர்கள் மூக்கையா பெருமாள்,லட்சுமணன்,கணேசன் கிளை அவைத்தலைவர் மாதவன் கிளை பிரதிநிதிகள் அதிலிங்கராஜ், முத்துகணேசன் மாணவரணி முத்து இருளப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.






