நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், நஞ்சுண்டாபுரத்தில் இருந்து வெள்ளலுார் செல்லும் சாலையில் அமைந்துள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
ஆற்றில் செல்லும் வெள்ளநீரின் வேகம் காரணமாக, சிங்காநல்லுாரில் இருந்து வெள்ளலுார் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.இந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது, இது இரண்டாம் முறையாகும். இந்நிலையில் நஞ்சுண்டாபுரத்தில் இருந்து வெள்ளலுார் செல்லும் சாலையில் இருந்த பாலத்தை மூழ்கடித்தபடி நேற்று தண்ணீர் சென்றது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பாலம், ஏற்கனவே பாதி உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இரு சக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்தன.அதிக வெள்ளநீர் பாய்வதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும், பொதுமக்கள் தெரிவித்தனர். இரு பாலங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், வெள்ளலுார் செல்வோர், பட்டணம் அல்லது போத்தனுாரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.