கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை வேட்டைக்காரன் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய சுந்தரசாமி நேற்று மாலை பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பகவுண்டர்புதூரில் இருந்து ஆனைமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது காளியப்பகவுண்டன்புதூர் வழியாக செல்லும் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப் பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் பாலத்தை கடந்து விடலாம் என்று எண்ணி சுந்தரசாமி பாலத்தை கடக்கையில் காட்டாற்று வெள்ளம் அவரை அடித்துச் சென்றது.
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கண் கலங்கி நின்றனர்.
உடனடியாக இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றங்கரையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பூச்சநாரி அருகே சுந்தரசாமி சடலமாகமீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார்.