பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில், பொள்ளாச்சி குமரன் நகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் பிளாஸ்டிக் குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சிக்கு குமரன் நகர் பகுதி 15 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் எம் .ஏ. வி துரைபாய் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ்.குமரன் நகர் பள்ளிய ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்களும் பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில், பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் பிளாஸ்டிக் குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு 26 வார்டு பகுதி நகர மன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ். கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம். மா. ஜெயச்சந்திரன் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.