கோவில்பட்டியில் கனமழையால் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியது! வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று காலையில் இருந்தே வெயில் அடித்தது. மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டது. 4 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில், தெருக்களில் மழை நீரும், கழிவுநீரும் கலந்து சென்றது. இளையரசனேந்தல் ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் புகுந்து சுமார் 5 அடிக்கு தண்ணீர் தேங்கியது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அதிகாரி காளிமுத்து சேகர், கிராம உதவியாளர் ராமமூர்த்தி, ரயில்வே பணியாளர் கண்ணன் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த வழியாக வாகனங்கள் செல்லாமல் தடுப்புகள் வைத்து, ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்த வண்ணம் இருந்தனர். மேலும் ஜமீன் பேட்டை தெருவில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இதனால் வீடுகளில் இருந்தவர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு, பாத்திரங்கள் மூலம் மழைநீைர வெளியேற்றினார்கள். புதுரோடு அரசு மருத்துவமனையில் இருந்து அண்ணா சிலை, நெடுஞ்சாலை துறை அலுவலகம் வரை மழைநீர் தேங்கி கடைகளுக்குள் புகுந்தது. மேலும் முச்சந்தி விநாயகர் கோவில் சந்திப்பு அருகில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி தடுமாறிச் சென்றது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp