கோவை தீபாவளி ஸ்பெஷல்!! எந்த ஊருக்கு எங்கெங்க பஸ் ஏறணும் தெரியுமா?

தீபாவளி பண்டிகையை ஒட்டி பயணிகள் வசதிக்காக கோவையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் நான்கு பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்ல ஏற்பாடுகள்
கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு திட்டமிடுவர். எனவே பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். ஆகையால் போதிய போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டியது அவசியமாகிறது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குறிப்பாக பண்டிகை நெருங்கும் வேளையில் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடும். அந்த வகையில் இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க பின்வரும் பேருந்து நிலைய மாற்றங்கள் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேருந்து நிலையங்கள் இயக்கப்படவிருக்கும் வழித்தடங்கள்
1) சிங்காநல்லூர் பேருந்து நிலையம் மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள்
2) சூலூர் பேருந்து நிலையம் கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
3) மத்திய பேருந்து நிலையம் சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
4) புதிய பேருந்து நிலையம் மேட்டுப்பாளையம் சாலை ஊட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

இந்த தற்காலிக ஏற்பாடானது வரும் அக்டோபர் 21 முதல் 23ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. இதுதவிர பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் வசதியும் கீழ்கண்டவாறு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழித்தடம் பேருந்துகளின் எண்ணிக்கை
கோவை – மதுரை 100
கோவை – தேனி 40
கோவை – திருச்சி 50
கோவை – சேலம் 50

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மேற்குறிப்பிட்ட அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் செல்ல காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளை பொதுமக்கள் அனைவரும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தீபாவளியை ஒட்டி கோவையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் சிரமமின்றி செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp