திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தியா என்பது பல்வேறு மாநிலம், வாழ்க்கை, மொழி முறை கொண்டது. அனைவரும் ஹிந்தி பேச வேண்டும் என திணிக்க கூடாது. என தூத்துக்குடியில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி தெரிவித்தார்.
இந்தி பிரச்சனையை மறுபடியும், மறுபடியும் கொண்டு வருவது மத்திய அரசு தான், மத்திய அரசு செயல்படாமல் இருப்பதை திசை திருப்பதற்காக தான் என்று நமக்கு தோன்றுகிறது. இந்த பிரச்சனையை மறுபடியும் மறுபடியும் கொண்டு வருகிறார்கள்.
தேவையே இல்லாமல் மொழி பிரச்சினையை எழுப்பி வருகிறார்கள். முதலில், கமிஷன் ரிப்போர்ட் மத்திய அரசு தான் வெளியிடுகிறார்கள். இவர்கள் செய்யாமல் இருந்திருந்தால் முதல்வர் எதிர் வினை தர வேண்டிய அவசியம் இருந்திருக்காது என கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.