சென்னையில் எஸ்.ஆர்.எஸ் சர்வோதயா இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களை முதன் முறையாக விமானத்தில் அழைத்துச்செல்ல கோயம்புத்தூரைச் சேர்ந்த மூன்று தன்னார்வ அமைப்புகள்
ரவுன்ட் டேபிள் இன்டியா முயற்சி எடுத்தன. Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ அதன்படி சென்னையில் இருந்து 15 சிறுமிகள் விமானத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். முதன் முறையாக விமானத்தில் பறந்த குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர். அதோடு, குழந்தைகளுக்கு விமானியின் அறை, விமானம் பறக்கும் முறைகளும் விளக்கப்பட்டன.
விமானத்தில் கோவை வந்தடைந்த சிறுமிகள் அவினாசி சாலையில் உள்ள ஜி.டி அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஈஷா யோக மையம் மற்றும் ஆதியோகி சிலையை காண குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். கோவையின் பெரும்பாலான இடங்களை சுற்றுப்பார்த்த அவர்களுக்கு இரவு உணவு, நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் 8 மணியளவில் கோவை விமான நிலையம் சென்ற சிறுமிகள் அங்கிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
முதன் முறையாக விமானத்தில் பறந்ததோடு, கோவையையும் சுற்றிப்பார்த்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், நண்பர்களுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு வாழ்வில் நீங்கா இடம் பிடிக்கும், மறக்கமுடியாது என்றும் சிறுமிகள்தெரிவித்தனர்! சென்னையிலிருந்து குழந்தைகளை கோவை அழைத்து வந்து மீண்டும் சென்னை அனுப்பி வைத்தது மனநிறைவாக
இருந்து என ரவுன்ட் டேபிள் இன்டியா நிர்வாகிகள் தெரிவித்தனர்!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.