மீண்டும் படையெடுக்கும் படையப்பாவின் அட்டகாசம்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலமான மூணார் பகுதியில் நீண்ட வருடங்களாகவே சுற்றி திரியும் படையப்பா என்ற பெயர் கொண்ட யானை. சில காலங்களாகவே இயற்கைக்கும் மனிதர்களுக்கும் எந்தவித துன்புறுத்தல் இல்லாதவாறு வாழ்ந்து வந்த இந்த யானை அங்கு வசிக்கும் மனிதர்களிடையே பல வரவேற்பு பெற்று படையப்பா என்ற பெயரையும் சூடிக்கொண்டது.
ஆனால் இந்த வருடத்தில் சில மாதங்களாகவே மனிதர்களோடு கூட வாழ்ந்த படையப்பா என்ற இந்த காட்டு யானை மனிதர்களின் வாழ்வாதாரங்களை அழித்தும் வீடுகளை சேதப்படுத்தியும் சாலையில் செயலும் வாகனங்களை வழிமறித்து வாகனங்களை உடைத்தும் வருவது வழக்கமாகி உள்ளன. நேற்று குட்டியார் என்ற பகுதியில் படையப்பா என்ற யானை இருசக்கர வாகனத்தை வழிமறித்து அதை உடைத்து மற்றும் அதன் வழியாக சென்ற ஜிப்பையும் சேதப்படுத்தி உள்ளது.
மீண்டும் படையெடுக்கும்
அங்கு விசாரிக்கும் பொழுது இதற்கான காரணம் யானையின் வாழும் சூழலில் மாற்றம் மட்டுமல்லாது மனிதர்கள் வாகன ஓட்டிகள் யானையை பார்த்தவுடன் ஒலிகளை எழுப்பி அருகில் சென்று வாகனத்தை அதிக வேக இயக்கி சத்தத்தை எழுப்பியும் அதை துன்புறுத்துவதாக கூறுகின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் காரணமாகவே இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஜீப் போன்ற வாகனங்கள் வந்தால் சாலைகளில் வழிமறித்து அதை உடைத்து நாசப் படுத்துகின்றன.
தற்பொழுது மக்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக உள்ளதால் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து படைப்பை என்ற யானை காட்டிற்குள் அனுப்ப வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் சாலையில் கடந்து செல்லும் பாதசாரிகளும் தங்களுடைய எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.