சூரியநல்லியில் குவியும் குப்பைகள் கண்டுகொள்ளுமா அரசு??
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள சின்னகானல் பஞ்சாயத்து சூரியநல்லியில் குப்பைகள் அதிகரித்து வருகின்றன. இது சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் இடம்.
குப்பைகளை அகற்ற சின்னகானல் பஞ்சாயத்து அதிகபடியான செலவுகள் செய்து வருகிறது, ஆனாலும் பராமரிப்பு சரியான முறையில் இல்லை. இதனால் சாக்குகளில் எடுத்து வைக்கிற குப்பைகளை தெரு நாய்கள் இழுத்து செல்கின்றன. இதை அகற்ற சில இடங்களில் குப்பை தொட்டி வேண்டும். குப்பைகளை ரோட்டில் போடுவதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதை சீர்படுத்த அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் சங்க தலைவர் சிவா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-காளிமுத்து விஜய்
மூணார்