நாடு முழுவதும் பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி அதிக அளவில் ஆன்லைனில் மோசடிகள் அதிகரித்துவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் என்ற விளம்பரத்தின் மூலம் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரத்தை அடுத்த வௌவால்தொத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் (48) என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்மந்தமாக ஒரு விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு பின்னர் அவர்கள் கொடுத்த Protonforex. com என்ற இணையத்தில் ரூபாய் 12-லட்சத்து 10-ஆயிரத்து 740- முதலீடு செய்துள்ளார்.
அதற்கு பின்னர் தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். ராமர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் ராமரை மோசடி செய்தது கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிராஜ் மகன் கருணாகரன் (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படையினர் நேற்று கோயம்புத்தூர் சென்று கருணாகரன் வீட்டு முன்பு வைத்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிமிருந்து ரூபாய் 5-லட்சம் பணம் அவரது வங்கி முடக்கம் மேலும் கார், ஆப்பிள் செல்போன் லேப்டாப் மற்றும் ஆகியவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல்
நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திக்க ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.