பூண்டி வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து சாவு!!

பூண்டி வெள்ளியங்கிரி

பூண்டி வெள்ளியங்கிரி

பூண்டி வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து சாவு!!

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை இளங்கோவடிகள் வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 60).
இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன்  கோவையை அடுத்த வெள்ளியங்கிரி கோவிலுக்கு வந்தார்.

முருகன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு தனது உறவினர் கண்ணன் மற்றும் நண்பர்களுடன் மலை ஏறிக்கொண்டிருந்த போது, முருகனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்்பட்டதால் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

இதை பார்த்து அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து முருகனை உடனடியாக மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் டாக்டர்கள் பரிசோதித்த போது, அடிவாரத்துக்கு கொண்டு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து, முருகனின் உடலை பிரேத பரிசோதனைக் காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp