மதுரை கிழக்கு ஒன்றியம், சக்கிமங்கலத்தில் புல எண் 43/5க்கு உட்பட்ட இடம்
நத்தம் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் குடியிருப்புகளுக்காக அரசு ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த இடத்தை தற்போது பணியில் இருக்கும் சக்கிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர், விலையில்லா வீட்டுமனைப் பட்டா பெறுவதற்கான கோரிக்கை மனுவினை வருவாய்த்துறையிடம் அளித்திவிட்டுக் காத்திருக்கும் பயனாளிகளைத் தவிர்த்துவிட்டு வேறு சில தனி நபர்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் அந்த இடத்தை மாவட்ட அளவிலான அதிகாரிகள் சிலர் விளையாட்டுத்துறைக்கு சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்ய முயலுவதாகவும் கூறப்படுகிறது. எனவே பயானிகளைத் தவிர்த்துவிட்டு, தனி நபர்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கும் கிராம நிர்வாக அலுவலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், அந்த இடத்தை விளையாட்டுத்துறைக்கு ஒதுக்குவதை கைவிடக் கோரியும் நேற்று (02/03/2023) காலை, மதுரை வடக்கு மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பொறியாளர். பக்ருதீன் அலி அகமத் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் M.H.சிக்கந்தர் முன்னிலை வகித்தார்.
முற்றுகைப் போராட்டத்தின்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க போராட்டத்தின் இறுதியில் மாநிலச் செயலாளர் மதுக்கூர் ஜபருல்லா, தெற்கு மாவட்டத் தலைவர் சேக் தாவூத், தலைமைக்கழக பேச்சாளர் ஜாகிர் உசேன், வடக்கு மாவட்டச் செயலாளர் அக்பர், தெற்கு மாவட்ட செயலாளர் தாஜ்தீன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மனு தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்திரவிட்டு, உரிய பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். நிகழ்வில் மதுரை வடக்கு மாவட்ட பொருளாளரும், தும்பைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான அயூப்கான், மதுரை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், சக்கிமங்கலம் கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
– மதுரை வெண்புலி.