வால்பாறை முடீஸ் பகுதியில் நிழல் குடை இல்லாததால் மழை மற்றும் வெயிலில் அவதிபடும் பொதுமக்கள்!!
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள முடீஸ் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் மக்கள் நின்று பேருந்து ஏறி செல்வதற்கு வசதியாக நிழற்குடை எதுவும் இல்லை.
இந்த சூழ்நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது மாலை நான்கு மணிக்கு மேல் மழை பெய்தது. இந்த சூழ்நிலையில் ஒதுங்கி நிற்க கூட நிழற்குடை இல்லாத காரணத்தால் மழையில் நனைந்து கொண்டே பேருந்துக்காக காத்து நிற்கும் நிலைமை ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே பேருந்து நிருத்தத்தில் நிழல் குடை அமைத்து தரவேண்டும் என்றும் பேருந்துகள் முறையாக பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.