தூத்துக்குடி துறைமுகத்தில் தீயணைப்புத்துறை ஊழியராக பணியாற்றிய கலைச்செல்வன் என்பவர் கடந்த மாதம் மர்ம மரணம் அடைந்தார் . அவரது மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது தந்தை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் பாஜக தலைவர் (எஸ்டி) ரா. பாலச்சந்திரபூபதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த புகார் அர்ஜுன்) நான் சர்வேயராக பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி எனக்கு சௌந்தரி மற்றும் கலைச்செல்வன் என 2 பிள்ளைகள் உள்ளனர். மகன் கலைச்செல்வனுக்கு சென்னையைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகள் நிவேதா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தேன். அவர்களுக்கு 6மாத குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனது மகன் கலைச்செல்வன் தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த 5-ம் தேதி பணிபுரிந்து வருகிறார் துறைமுக கோர்ட்டர்ஸ் ஆன பாரதி நகர் டைப் 1, 202 பிளாக்கில் வசித்து வந்தான் கடந்த 13.04.23 அன்று எனது மகன் குடியிருக்கும் வீட்டிலிருந்து பக்கத்து வீட்டிற்கு ஒதுக்குபுறமான பின்பகுதியில் இறந்து கிடப்பதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு இரவு சுமார் 11:45 மணிக்கு துறைமுகம் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு இறந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். மறுநாளான 14.04,23 அன்று அரசு மருத்துவமனைக்கு வந்து பிரேத பரிசோதனை செய்து உஞலை என்னிடம் கொடுத்தார்கள் . நான் போலீஸ் எனது மகனை கொலை செய்துள்ளேன் என்று கூறினேன் . அதற்கு போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வரட்டும் என்றார்கள் . தற்போது இரண்டு தினங்களுக்கு முன்பு போஸ்ட் மாடம் ரிப்போர்ட்டை நான் வாங்கினேன் . அதில் இறுதிக் கருத்து- ல் அதில் உடம்பில் பல இடங்களிலும் காயங்கள் பட்டு சிக்கலான முறையில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது .
இரண்டு மாடிக்கு மேலிருந்து கீழே விழுந்தால் கை, கால்கள் மூட்டுப்பகுதி எலும்புகள் உடைந்திருக்கும் மற்றும் தலை பகுதி போன்றவை சிதறி மண்டை உடைந்திருக்க வேண்டும். ஆனால் எந்த வெளிக்காயமும் இல்லாமல் உடம்பு முழுவதும் உள் காயங்களாக காணப்பட்டிருக்கிறது. கீழே விழுந்து இறந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே எனது மகன் மரணம் தொடர்பாக வீட்டின் அருகில் உள்ளோர்கள் உடன் பணிபுரிந்த நபர்கள் அனைவரையும் விசாரணை செய்து எனது மகன் உபயோகித்த இரண்டு மொபைல் போன்கள், பிரேத பரிசோதனை அறிக்கை, போன்றவற்றை ஆய்வு செய்து எனது மகனை கொலை செய்த நபர்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து சட்டப்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.