தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் நேற்று காலை யூனியன் சேர்மன் எல் ரமேஷ் அவர்கள் தலைமையில் மற்றும் துணை சேர்மன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தக் கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் சில கோரிக்கைகள் வைத்தனர் அடுத்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சரோ வைத்து கூட்டம் நடைபெற வேண்டுமென கோரிக்கை வைத்தனர் இதற்கு பதில் அளித்த பேசிய யூனியன் ஆணையர் சிவபாலன் இது சம்பந்தமாக யூனியன் சேர்மன் அவரிடம் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என பதில் அளித்தார்.
பின்னர் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள், அரசின் மக்கள் நலத் திட்டங்கள், செலவினங்கள் குறித்தும் விவாதம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் யூனியன் ஆணையர் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ் , ஊராட்சி துறை சார்ந்த அலுவலர்கள், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.