கொட்டாம்பட்டி அருகே விபத்து – 9மாத கைக்குழந்தையுடன் தூக்கி வீசப்பட்டு தாய் பலி!!! பின்நோக்கி வந்த காரால் விபரீதம்!!!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள வடகாடுபட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் கார்த்திக் (வயது 30). இவர் மதுரையில் உள்ள தனியார் உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி(22). இவர்களுக்கு சர்வேஷ் என்ற 9 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் கார்த்திக் நேற்று மனைவி, குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்துள்ளார்.

கொட்டாம்பட்டி அருகே கச்சராயன்பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் அருகே உள்ள சென்னை – மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை சுமார் 11.05 மணியளவில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென பிரேக் அடித்து பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக பின்னோக்கி வேகமாக வந்துள்ளது, அதன் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் நிலை தடுமாறி கார் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரிக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களது கைகுழந்தை சர்வேஷிக்கு எந்த காயம் ஏற்படவில்லை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

படுகாயம் அடைந்த புவனேஸ்வரி மற்றும் கார்த்திக்கை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் காயம் அடைந்த கார்த்திக் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சுப்பிரமணி(32) என்பவரை கைது செய்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

– மேலூர், தமிழரசன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp