மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார் வயது (48). இவர் அப்பகுதியில் பிராய்லர் கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு அதன் பின்பு கடைக்கு செல்வதுதான் வழக்கம்.
இதனிடையே நேற்று காலையும் சிவகுமார் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு தனது பிராய்லர் கடைக்கு சென்றுவிட்டனர். இதனை, நோட்டமிட்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டிலிருந்த தங்க நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில், பிராய்லர் கடை நடத்தி முடித்துவிட்டு மனைவி, குழந்தைகளுடன் மீண்டும் வீடு திரும்பிய சிவக்குமார், தன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் கலைக்கப்பட்டு கிடந்தது. மேலும்., பீரோ லாக்கரை பார்க்கும்போது அந்த கும்பல் பீரோவில் இருந்து 13 பவுன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரொக்க பணம்., வெள்ளி பொருட்கள் உள்பட அனைத்தையும் திருடிச்சென்றது தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து சிவக்குமார் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் சிவக்குமார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து 13பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்க பணம் திருடிச் சென்ற மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சூரக்குளத்தில் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அதன் அருகில் உள்ள கூத்தியார்குண்டு கிராமத்திலும் பணம், நகை மர்ம கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது . அடுத்தடுத்து பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-தமிழரசன், மேலூர்.