தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு குலசை சூப்பர் கிங்ஸ் நடத்திய மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 32 அணிகள் கலந்து கொண்டன, வெற்றி பெற்று முதல் ஆறு அணிகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
முதல் பரிசை குலசை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி சென்றது அந்த அணிக்கு ரூபாய் 12001, இரண்டாம் பரிசை வி எஸ் கிரிக்கெட் கிளப் கவர்னகிரி அணிக்கு ரூபாய் 10001 , மூன்றாவது பரிசை பொட்டல் காடு அணிக்கு ரூபாய் 8001 , நான்காம் பரிசு குலசை B அணி ரூபாய் 6001, ஐந்தாவது பரிசை முள்ளாக்காடு அணிக்கு ரூபாய் 4001, ஆறாவது பரிசை கொம்பாடி தளவாய்புரம் அணிக்கு ரூபாய் 2001 தட்டி சென்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் உதவி காவல் ஆய்வாளர் முத்துராஜ் அவர்கள் கலந்து கொண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு பனியன் நன்கொடை வழங்கி வீரர்களை ஊக்கப்படுத்தினார். இதனை தொடர்ந்து அவர் இளைஞர்கள் செல்போனில் அதிக நேரம் மூழ்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி, கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் காவல்துறை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.