சிங்கம்புணரியில் மீண்டும் உழவர் சந்தை செயல்படும்! மாவட்ட ஆட்சியர் உறுதி!!

நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிக்கு வந்திருந்தார். முதலில் கூத்தாடி அம்மன் கோவில் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற சிறப்பு குடும்ப நல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாமில் கலந்து கொண்டு அங்கு கூடி இருந்த தாய்மார்களிடையே, தற்காலிக குடும்ப நலம் மற்றும் நிரந்தர குடும்பநலமுறைகள் மற்றும் வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார்.

அதன்பின்பு, சிவகங்கை தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மரச்செக்கு எண்ணெய் ஆலையை பார்வையிட்டார்.
அங்கிருந்து திண்டுக்கல் சாலையில் உள்ள உழவர் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள, அந்த நிறுவனத்தின் பல்பொருள் அங்காடியை பார்வையிட்டார்.

அப்போது அங்கு இருந்த விவசாயிகள், ‘முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டம் உழவர் சந்தை திட்டம். அந்த உழவர் சந்தையை சிங்கம்புணரியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார். இச்சந்தையில் கடை அமைக்க வேளாண் விற்பனை அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் மிகுந்த முயற்சி எடுத்து வியாபாரிகளையும், விவசாயிகளையும் அழைத்து வந்தனர். இருந்த போதிலும் அனைத்து கடைகளும் வெளியேறி, தற்போது சிங்கம்புணரி உழவர் சந்தை வெறிச்சோடி செயல்படாத நிலையில் உள்ளதை’ மாவட்ட ஆட்சியரிடம் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து அங்கு வந்திருந்த சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் அழைத்த மாவட்ட ஆட்சியர், ‘சிங்கம்புணரி பெரியகடைவீதியில் போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் விதத்திலும், சுகாதாரமற்ற முறையிலும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகளை அகற்றி, அவற்றை உழவர் சந்தைக்கு உடனடியாக மாற்றுமாறு’ உத்தரவிட்டார்.

– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp