டீ யில் புழுக்கள் மிதப்பதாக புகார் கூறிய துப்புரவு தொழிலாளிக்கு மிரட்டல்!! காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை!!!

கோவை போத்தனூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மகன் 35 வயதான மாயவன், இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களுடன் ராஜவீதி பகுதியில் உள்ள பேக்கரியில் டீ சாப்பிட சென்றுள்ளார்.

அப்போது மாயவன் குடித்த டீயில் புழு ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து மாயவன் பேக்கரி உரிமையாளர் ராமசாமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கடையின் உரிமையாளர் ராமசாமி துப்புரவு பணியாளர் மாயவன் ஜாதி குறித்து திட்டியதாக கூறப்படுகிறது, புழு விழுந்து கிடந்த டீயை குடித்த மாயவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மாயவன் கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று, புகார் அளித்தார், போலீசார் பேக்கரி உரிமையாளர் ராமசாமி மீது, ஜாதி பெயரை சொல்லி திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp