பட்டா திருத்தம் செய்ய ₹.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் உள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மணி என்பவர், தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டாவில் திருத்தம் செய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த வழக்கை தனக்குச் சாதகமாக்கச் செய்யும் வகையில், பட்டாவில் திருத்தம் மேற்கொள்ள கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணிபுரியும் பாலு என்பவரை அனுகியிருக்கிறார், மணி.
அந்த வேலையை முடித்துக் கொடுப்பதற்காக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலு, ₹.10,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணி, கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் முறையிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, அவர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மணியிடம் கொடுத்து, அதை பாலுவிடம் தரச் சொல்லியுள்ளனர்.
அதையடுத்து அந்த 10,000 ரூபாயை கொண்டு சென்ற மணி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலுவிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், பாலுவை கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர். இந்த விவகாரம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– பாரூக்.