ஓட்டப்பிடாரம் டிஎம்பி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் மற்றும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் கலந்து கொண்டனர். முதலில் மாணவர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது, பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 65 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது .

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஓட்டப்பிடராய் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள்: தமிழ்நாடு அரசு அதிக நிதியை கல்வித் துறைக்கு தான் ஒதுக்கிறது, இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது , மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி இலவச புத்தகங்கள், சீருடைகள், உதவித்தொகை என நமது அரசு வழங்கி வருகிறது, மாணவர்கள் நல்ல முறையில் படித்து சிறந்த மாணவர்களாக வர வேண்டும் ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என பேசினார்.

பின்னர் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் பேசியது: சட்டமன்ற உறுப்பினர் இந்த விழாவிற்கு வருவதாக இருந்தது அமைச்சர் அவர்களுடன் விழாவிற்கு சென்று விட்டதால் நானும் சேர்மன் இந்த விழாவிற்கு வந்துள்ளோம் , சிறப்பாக வரவேற்பு அளித்த குட்டி அன்னை தெரேசா தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி ,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தப் பள்ளிக்கு எனது சார்பில் 50 பெஞ்ச் டெஸ்க் தருவதாக வாக்குறுதி அளிக்கிறேன், அதுமட்டுமல்லாது வ உ சி அரசு பள்ளிக்கு 25 பெஞ்ச் டெஸ்க்கும் முப்புலிவெட்டி பள்ளிக்கு 25 பெஞ்ச டெஸ்க்கும் வழங்குவதாக உள்ளேன், இதான் மதிப்பு சுமார் 7 லட்சம் ஆகும். மாணவர்கள் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்ற லட்சியத்தில் படித்து இந்தப் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பேசினார். இந்த விழாவில் பள்ளி நிர்வாகி ஜேம்ஸ் பாஸ்கர் அவர்கள், தலைமையாசிரியர் வனஜா மங்களசெல்வி அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

–முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp