கோவை மாநகரில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கிய கோயமுத்தூர் ஆம்னி பஸ் ஓனர்கள் சங்கத்தினர்…

கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை கண்டறிய மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் சிக்னல் உள்ளிட்ட பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் கோவை மாநகர காவல் துறையினர் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.

இந்த சிசிடிவி கேமராக்கள், பல்வேறு சமயங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிய மிகவும் உதவியாக உள்ளது. அது மட்டுமின்றி பொதுமக்களும் அவர்களது இல்லம் மற்றும் கடைகள், அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் கோயமுத்தூர் ஆம்னி பஸ் ஓனர்கள் சங்கம் சார்பில் கோவை மாநகரில் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கு 5 லட்சம் ரூபாய் காசோலையை கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினர். இந்த காசோலையை அச்சங்கத்தின் தலைவர் கே.எஸ்.திருமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார், உபதலைவர் தசரதன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் ஒன்று சேர்ந்து வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸ், காந்திபுரம் ஆய்வாளர் முனியம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp